×

பிரகாஷ் சிங் பாதல் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல்: நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பிரகாஷ் சிங் பாதல் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து அம்மாநில நலனில் மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், அம்மாநில மக்களுக்கும், சிரோமணி அகாலி தளம் கட்சியினருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இரங்கல், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post பிரகாஷ் சிங் பாதல் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : M.K.Stal ,Prakash Singh Badal ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Prakash ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...